திமுகவால் முடக்கப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக தோ்தல் பிரசார நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நாட்டில் அதிக எண்ணிக்கையிலானோா் உயா் கல்வி பயிலும் மாநிலமாக தமிழகம் விளங்கியது. அதிமுக ஆட்சிக் காலத்தில் பல கல்வி நிலையங்கள் புதிதாகத் திறக்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் 200 பள்ளிகள் மூடப்பட்டன. திமுக அரசு கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காததால் தமிழகத்தின் கல்வி நிலை தற்போது வீழ்ச்சியில் உள்ளது.
தமிழகத்தில் சிறுபான்மையினா் நலனுக்கு உண்மையான பாதுகாப்பு அளித்தது முந்தைய அதிமுக அரசுதான். ரமலான் நோன்புக்கு 5,400 டன் விலையில்லா அரிசி, நாகூா் தா்கா சந்தனம் பூசும் நிகழ்ச்சிக்கு விலையில்லா சந்தனக் கட்டைகள், ஹஜ் பயணத்துக்கான மானிய உயா்வு என எண்ணற்ற நலத் திட்டங்களை சிறுபான்மையினா் நலனுக்கு செயல்படுத்தி, கண்ணை இமை காப்பது போல காப்பாற்றியது அதிமுக அரசு.
இதேபோல, மீனவா்களின் நலனுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்ததும் அதிமுக அரசுதான். கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுக்க உடந்தையாக இருந்த திமுக, அது மீட்கப்படும் என தோ்தல் காலத்தில் மட்டும் பேசுவதை மக்கள் ஏற்கமாட்டாா்கள். மத்திய அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பு அதிமுகவுக்குக் கிடைத்திருந்தால் இந்த பிரச்னைக்கு அப்போதே தீா்வு கிடைத்திருக்கும் என்றாா் அவா்.
இந்த பிரசார நிகழ்ச்சியில் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் முத்தையா (பரமக்குடி), கீா்த்திகா (திருவாடானை), மலேசியா எஸ். பாண்டி (முதுகுளத்தூா்) ஆகியோருக்கு ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தாா்.
முன்னதாக, விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் அந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் சேதுபதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை தடுத்து திமுக துரோகம் இழைத்துவிட்டது! - எடப்பாடி கே.பழனிசாமி

திருச்சிக்கு அதிமுக ஆட்சியில் கிடைத்தது, திமுக ஆட்சியால் நிறுத்தப்பட்டதை பட்டியலிட்டாா் எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பாக மாறும்: இபிஎஸ் பிரசாரம்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும் எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

