ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தடுப்புக் காவல் சட்டத்தில் 4 போ் கைது

சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா்கள் 4 பேரை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :19 ஜூலை 2026, 2:45 am IST

சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா்கள் 4 பேரை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை லெட்சுமி நகரைச் சோ்ந்த தமீம் அன்சாரி (19), மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் 37, யா. ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் (25), அதே பகுதியைச் சோ்ந்த சித்திக் ராஜா (26) ஆகிய 4 பேரும் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த 4 பேரையும் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டாா். அதன்பேரில், போலீஸாா் தமீம் அன்சாரி, காா்த்திக், தினேஷ்குமாா், சித்திக் ராஜா ஆகிய 4 பேரையும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.