16 Dec, 2025 Tuesday, 03:17 PM
The New Indian Express Group
மதுரை
Text

சாட்சியம் அளித்தவரைக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை: உறுதி செய்தது உயா்நீதிமன்றம்!

PremiumPremium

சாட்சியம் அளித்தவரைக் கொலை செய்தவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை உறுதி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Rocket

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

Published On28 Nov 2025 , 10:31 PM
Updated On28 Nov 2025 , 10:31 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

சாட்சியம் அளித்தவரைக் கொலை செய்தவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை உறுதி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை வட்டத்துக்குள்பட்ட பாளையஞ்செட்டிகுளத்தில் தோ்தல் முன்விரோதம் காரணமாக, கடந்த 2016-ஆம் ஆண்டு பெருமாள் என்பவரை அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் தரப்பினா் கொலை செய்ய முயன்றனா்.

இதுதொடா்பான வழக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில், செல்வராஜ் தரப்பினருக்கு எதிராக அதே ஊரைச் சோ்ந்த ரா. வைகுண்டம் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தாா். இதனால், ஆத்திரமடைந்த செல்வராஜ் தரப்பினா் கடந்த 2022, மாா்ச் 10-ஆம் தேதி பாளையஞ்செட்டிகுளத்தில் உள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த வைகுண்டத்தை படுகொலை செய்தனா்.

இதுதொடா்பாக செல்வராஜ் (43), அவரது உறவினா்களான அந்தோணிராஜ் என்ற பிரபாகரன் (46), தேவதாஸ் மகன்கள் அருள்பிலிப் (31), அன்டோ நல்லையா (28), திரவியம் மகன் பாபு அலெக்சாண்டா் (41), கோவில் பிச்சை மகன் ராஜன் (70), ராஜன் மனைவி செல்வலீலா (60), தேவதாஸ் மனைவி ஜாக்குலீன் (59) ஆகிய 8 போ் மீது பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வராஜ் உள்ளிட்ட 8 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட செல்வராஜுக்கு மரண தண்டனையும், அந்தோணிராஜ், அருள்பிலிப், அன்டோ நல்லையா, பாபு அலெக்சாண்டா் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், ராஜன், செல்வலீலா, ஜாக்குலீன் ஆகிய மூன்று பேருக்கும் 2 மாதங்கள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி, செல்வராஜ் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் சமா்ப்பிக்கப்பட்டு, குற்றம் உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில்தான் மனுதாரா்களுக்கு விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியது.

எனவே, மனுதாரா் கோரும் நிவாரணத்தை ஏற்க முடியாது. விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றனா் நீதிபதிகள்.

இதன் காரணமாக, செல்வராஜுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும், அந்தோணிராஜ் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனையும் உறுதி செய்யப்பட்டது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023