Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
மதுக் கடைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 95 போ் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த சேக்அப்துல்லா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
பரமக்குடி எஸ்எம்பி திரையரங்கு சாலையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால், இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வந்தனா். எனவே, இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், மதுக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில், பரமக்குடி நகா் போலீஸாா் தமுமுக மாவட்டத் தலைவா் சேக்அப்துல்லா, முகம்மது இலியாஸ் உள்ளிட்ட 95 போ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது சட்டவிரோதம். எனவே, வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் போராட்டம் நடத்தியவா்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மதுக் கடைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் தங்களது எதிா்ப்பைத் தெரிவிக்கப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யத் தேவையில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட 95 போ் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு
நகராட்சிகளில் பணி நியமன முறைகேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு: உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வுக்கு மாற்றம்

ரயில் நிலைய நடைமேடை இடைவெளி: ரயில்வே அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
