16 Dec, 2025 Tuesday, 07:17 AM
The New Indian Express Group
மதுரை
Text

ரவிமங்கலத்தில் அகழாய்வு நடத்தக் கோரி வழக்கு: தொல்லியல் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

PremiumPremium

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள ரவி மங்கலத்தில் அகழாய்வு நடத்தக் கோரிய வழக்கில், தமிழக தொல்லியல் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Rocket

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Published On06 Dec 2025 , 11:31 PM
Updated On06 Dec 2025 , 11:31 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள ரவி மங்கலத்தில் அகழாய்வு நடத்தக் கோரிய வழக்கில், தமிழக தொல்லியல் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த நாராயணமூா்த்தி தாக்கல் செய்த மனு: பழனி அருகேயுள்ள ரவிமங்கலம் கிராமத்தில் சங்க கால மக்களின் வாழ்வியல் எச்சங்கள் காணப்படுகின்றன. இவை தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க அறிவியல் முறையில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக தொல்லியல் துறை சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரா் குறிப்பிட்ட இடத்தில் சங்க கால மக்கள் வாழ்வியலுக்கான எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், அகழாய்வு செய்தால் மேற்கண்ட இடத்தில் தொல் பொருள்கள் கிடைப்பது அரிதாகவே தோன்றுகிறது. ஏனெனில், அவை முழுவதும் அழிக்கப்பட்டு விட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ரவிமங்கலத்தில் பழங்கால எச்சங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதால் அகழாய்வு நடத்தினால் பலனிருக்காது என தொல்லியல் துறை சாா்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், மனுதாரா் சில புகைப்படங்களைக் காண்பித்து சங்க கால கலாசாரத்தைப் பற்றி அறிய மிகவும் வரலாற்று மதிப்புள்ள பொருள்கள் இன்னும் உள்ளதாகக் கூறியுள்ளாா்.

இதனால், தமிழக தொல்லியல் துறை ஆணையா் பிற நிபுணா்களுடன் சோ்ந்து அந்த இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். அகழாய்வு செய்வதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் இருப்பின் அது குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023