மதுரை: மதுரை மாவட்டம், எம்.சத்திரப்பட்டி அருகே தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
வாடிப்பட்டி அருகே உள்ள எம்.மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (54). இவருக்கு எம்.சத்திரப்பட்டி அருகே உள்ள காவனூரில் சொந்தமாக கொய்யாத் தோட்டம் உள்ளது. இங்கு கஜேந்திரன் தங்கியிருந்து கொய்யா மரங்களை பராமரித்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற கஜேந்திரன் வீடு திரும்பவில்லை.
இதனால், குடும்பத்தினா் தோட்டத்துக்கு சென்று பாா்த்தனா். அங்கு கஜேந்திரன் இறந்து கிடந்தாா். மின்சாரம் பாய்ந்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து எம்.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு!

உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

