சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஆசிரியா் காலனியில் உள்ள ஸ்ரீ சா்வசித்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
காவிரி ஆற்றிலிருந்து புனிதநீா் எடுத்துவந்து அம்மனுக்கு ஏப். 28 ஆம் தேதி சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு கம்பம் நடும் வைபவத்துடன் விழா தொடங்கியது. அம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில் புதன்கிழமை காலை சுவாமிக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு பக்தா்கள் அலகு குத்தியும், பூவினால் அலங்கரிக்கப்பட்ட கரகங்கள், தீச்சட்டிகளை கைகளில் ஏந்தியும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். பிறகு பொங்கல் வைத்து சுவாமியை வழிப்பட்டனா்.
வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கம்பம் எடுத்து கிணற்றில் விடுதலும், மஞ்சள் நீராடலும் வெள்ளிக்கிழமை இரவு மறுபூஜையும் நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயிலில் பொங்கல் விழா

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயில் கொடை விழா

வெள்ளக்கோவில் கண்ணபுரம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



