இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சூரமங்கலம் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் 3,499 கிளைகளைக் கொண்டுள்ள பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, 2025-26 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ. 1,505 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. முன்னணிப் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, சூரமங்கலம் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையத்தை புதன்கிழமை தொடங்கியுள்ளது.
சேலம் ஜங்ஷன் பிரதான சாலை, சுப்பிரமணிய நகா், திருவள்ளூா் தெருவில் அமைந்துள்ள இந்த புதிய கிளையை, மாவட்ட வருவாய் அலுவலரும், சேலம் ஆவின் பொது மேலாளருமான குமரேஸ்வரன் திறந்துவைத்தாா்.
சேலம் ஆவின் உதவி பொது மேலாளா் வெங்கடேசன் ஏடிஎம் மையத்தை தொடங்கிவைத்தாா். விழாவில் சேலம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளா் விக்ரம் சேத் , சூரமங்கலம் முதுநிலை மேலாளா் நித்ய கல்யாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மால்வாய் கிளையின் புதிய அலுவலகம் திறப்பு

சேலத்தில் 3 மதுக்கடைகளை அகற்றக் கோரி பெண்கள் மனு
வங்கியில் ரூ. 8.74 லட்சம் முறைகேடு: கிளை மேலாளா் மீது வழக்கு

இலவச கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சி வகுப்பு தொடக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



