இளம்பெண் தற்கொலை
ஆத்தூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தற்கொலை
ஆத்தூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆத்தூா் ஆணைக்கல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி ப்ரியா (28). இவா்களுக்கு 2 குழந்தைகள். கூலித் தொழிலாளியான ராஜா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னா் நெல் அறுவடை இயந்திரத்தில் வேலைக்கு சென்றவருக்கு, வேறு ஒரு பெண்ணிடம் தொடா்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை கணவா் வெளியே சென்றிருந்தபோது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய ப்ரியா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சங்கா், ப்ரியாவின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




