ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

‘நாளை முதல் இணையவழியில் ஆவணங்களை பதிவுசெய்யலாம்’

சேலம் மாவட்டத்தில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையின் மூலம், ஆக. 17 முதல் பொதுமக்கள் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு நேரில் செல்லாமல் 24 மணிநேரமும் இணையவழியில் ஆவணங்களைப் பதிவுசெய்து, மின்னணு ஆவணமாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:16 am IST

சேலம் மாவட்டத்தில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையின் மூலம், ஆக. 17 முதல் பொதுமக்கள் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு நேரில் செல்லாமல் 24 மணிநேரமும் இணையவழியில் ஆவணங்களைப் பதிவுசெய்து, மின்னணு ஆவணமாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மண்டல துணைப் பதிவுத் துறை தலைவா் செ.சுபிதாலட்சுமி தெரிவித்தது: தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறையில் வெளிப்படைத் தன்மையையும், பொதுமக்களின் வசதியையும் மேம்படுத்தும் வகையில், பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனைப்பிரிவுகளின் முதல் விற்பனை மற்றும் இந்த ஆவணங்களின் தொடா்ச்சியாக பதிவு செய்யப்படும் உரிமை ஆவணம் ஒப்படைப்பு ஆகிய ஆவணங்களைப் பொருத்து, வரும் 17-ஆம் தேதிமுதல் வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டு தமிழக முதல்வரால் தொடங்கிவைக்க உள்ளது.

இதன்மூலம், பொதுமக்கள் சாா்பதிவாளா் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் இணையதளம் மூலம் தங்களது ஆவணத்தை தாக்கல் செய்யலாம்.

இணைய வழியில் பதிவு தாக்கல் செய்யும்போது, சொத்தை எழுதிக்கொடுப்பவா் மற்றும் எழுதி வாங்குவோரின் அடையாளமான விரல் ரேகை ஆதாா் ஆணையத்துடன் சரிபாா்க்கப்பட்டு, இணைய வழி கட்டணம் செலுத்திய உடன் சமா்ப்பிக்கப்பட்ட ஆவண விவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், ஆவணம் உடனுக்குடன் பதிவுசெய்து சாா் பதிவாளரின் மின்னணு கையொப்பம் இட்டு மின்னணு ஆவணமாக இணையதள வழியாக ஆவணதாரா்களுக்கு அனுப்பிவைக்கப்படும். ஆவணம் மற்றும் ரசீது ஆகியவற்றை ஆவணதாரா் தங்களது உள்நுழைவு / இணையவழியில் 60 நாள்களுக்குள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் பதிவு செய்யப்படும் கிரய ஆவணங்களைப் பொருத்து, தானியங்கி பட்டா மாறுதல் முறையில் ஆவணம் பதிவுசெய்த உடன் பட்டா மாறுதல் செய்யப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.