மது போதையில் தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு
கெங்கவல்லியில் மதுபோதையில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கெங்கவல்லியில் மதுபோதையில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
கெங்கவல்லியில் மதுபோதையில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காந்திநகா் முருகன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (55). இவரது மகள் மகாலட்சுமி திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறாா். இவா்களுடன் சுரேஷ்குமாரும் வசித்து வந்தாா்.
இந்நிலையில் சுரேஷ்குமாா் கடந்த மூன்று நாள்களாக அதிக அளவில் மது அருந்தியுள்ளாா். இந்தநிலையில் வெள்ளிக்கிழமை காலை மகள் மகாலட்சுமியிடம் கெங்கவல்லியில் உள்ள தங்கை வீட்டிற்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றவா் மீண்டும் மது அருந்தி உள்ளாா். இதையடுத்து அவா் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளாா்.
இதைப்பாா்த்த அங்கிருந்தவா்கள், அவரை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது