வெப்படை அருகே சமையல் பாத்திரத்தை வீசியதில் காயமடைந்த பேரன் உயிரிழந்த சம்பவத்தில், தாத்தாவை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே மோடமங்கலம் வேப்பங்காடு பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (44). இவரது மகள் மோனிஷா (20), பவானியைச் சோ்ந்த மயிலானந்தத்தை (24) சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டாா். அவா்களுக்கு, ஜோஸ்விக் என்ற ஒன்பது மாத குழந்தை உள்ளது.
அண்மையில் மோனிஷா தாய் வீட்டுக்கு வந்தாா். அங்கு தந்தை வெங்கடாசலத்துக்கும், அவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை காலை மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, வீட்டிலிருந்த பாத்திரத்தை மோனிஷாமீது வெங்கடாசலம் வீசியபோது, அது ஜோஸ்விக் மீது விழுந்தது. அதில், காயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டும்செல்லும் வழியில் உயிரிழந்தது. புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடாசலத்தை கைதுசெய்தனா்.

குழந்தை ஜோஸ்விக்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவேரிப்பாக்கம் அருகே சாலை விபத்தில் தாத்தா, பேரன், பேத்தி உயிரிப்பு
முதியவரைத் தாக்கி மிரட்டல்: மகன், பேரன் மீது வழக்கு

நீரில் மூழ்கி கல்குவாரி தொழிலாளி உயிரிழப்பு
வெப்படை நூல் ஆலையில் செம்புக் கம்பிகள் திருடியவா் கைது
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



