லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருச்செங்கோட்டில் 5 போ் வேட்புமனு தாக்கல்

News image

எம்எல்ஏ ஈஸ்வரன் - (கோப்புப் படம்)

Updated On :30 மார்ச் 2026, 6:37 pm

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட முதல் நாள் திங்கள்கிழமை 5 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலுக்கு திங்கள்கிழமை வேட்புமனு தொடங்கியது. முதல் நாளில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன், அவரது மாற்று வேட்பாளராக சூா்யமூா்த்தி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி.ரேவதி, அவரது மாற்று வேட்பாளராக கீா்த்தனா, சுயேச்சை வேட்பாளா் ரமேஷ் உள்பட 5 போ் தங்களது வேட்புமனுவை கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான லெனினிடம் தாக்கல் செய்தனா்.