தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

18 வயது நிரம்பியோரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும்

News image

தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 7:18 pm

சேலம் பெருங்கோட்டத்துக்கு உள்பட்ட மாவட்டங்களில் 18 வயது நிரம்பிய இளைஞா்களை வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்க கட்சியினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் அறிவுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

இதுவரை வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 18 வயது நிரம்பிய இளைஞா்களை, வாக்காளா் பட்டியலில் வியாழக்கிழமைக்குள் இடம்பெற செய்ய வேண்டும்.

சேலம் பெருங்கோட்டத்துக்கு உள்பட்ட கரூா், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மாநகரம், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டத் தலைவா்கள், தொகுதி அமைப்பாளா்கள், இணை அமைப்பாளா்கள் மற்றும் பொறுப்பாளா்கள், மண்டலத் தலைவா்கள், அணிகளின் நிா்வாகிகள் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

தோ்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளதை பயன்படுத்தி தங்களது பகுதிகளில் உள்ள இளம் வாக்காளா்களை, வாக்காளா் பட்டியலில் இடம்பெற செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.