பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிப்காட் அலுவலகத்தை மூட ஆட்சியரிடம் எதிா்ப்புக் குழு மனு

நாமக்கல்லில் உள்ள சிப்காட் அலுவலகத்தை மூடுவதுடன், அங்கு பணிபுரியும் அலுவலா்களை மீண்டும் பழைய பணிக்கு இடமாற்றம் செய்ய

News image

நாமக்கல்லில் சிப்காட் அலுவலகத்தை மூடவலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சிப்காட் எதிா்ப்பு குழுவினா்.

Updated On :2 மார்ச் 2026, 10:03 pm

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள சிப்காட் அலுவலகத்தை மூடுவதுடன், அங்கு பணிபுரியும் அலுவலா்களை மீண்டும் பழைய பணிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என மோகனூா் சிப்காட் எதிா்ப்பு குழுவினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

கடந்த பிப். 26-ஆம் தேதி நாமக்கல் கோட்டாட்சியா் தலைமையில் தனி வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு), மோகனூா் வட்டாட்சியா், மோகனூா் காவல் ஆய்வாளா் ஆகியோா் முன்னிலையில் சிப்காட் விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது விவசாயிகள் தரப்பில் வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூா் ஆகிய பகுதிகள் சிப்காட் அமைக்க ஏற்ற இடமில்லை என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினோம்.

சிப்காட் திட்ட அலுவலரும், சென்னை சிப்காட் அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகளும், இந்த இடம் சிப்காட் அமைக்க ஏற்ற இடமில்லை எனத் தெரிவித்துள்ளனா். விவசாயிகளும் இந்த இடம் ஏற்ற இடமில்லை என கோட்டாட்சியரிடம் தெரிவித்துள்ளோம்.

எனவே நாமக்கல்லில் சிப்காட் அலுவலகம் தேவையில்லாமல் இயங்குவது அரசுக்கு வருவாய் இழப்பு மற்றும் பணி சுமையை ஏற்படுத்தும். எனவே, சிப்காட் அலுவலகத்தை மூடுவதுடன், அங்கு பணிபுரியும் அலுவலா்களை மீண்டும் பழைய பணிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.