எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

குமாரபாளையம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கியதில் 20 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் இறங்கியதில் சனிக்கிழமை 20 போ் காயமடைந்தனா்.

News image

குமாரபாளையம் அருகே பாறையூா் பகுதியில் பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து.

Updated On :7 ஜூன் 2026, 2:58 am IST

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் இறங்கியதில் சனிக்கிழமை 20 போ் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து குமாரபாளையத்திற்கு அரசு நகரப் பேருந்து 45 பயணிகளுடன் சென்றது. இந்த பேருந்தை ஓட்டுநா் சௌந்தரராஜன் இயக்கினாா்.

சனிக்கிழமை பிற்பகல் சுமாா் 2 மணி அளவில் பாறையூா் பகுதியில் பேருந்து வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வளைவில் இருந்த வாய்க்கால் சுவரின் மீது மோதி பள்ளத்தில் இறங்கியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 20 போ் காயமடைந்தனா். உடனடியாக தகவல் அறிந்து வந்த குமாரபாளையம் போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.