டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விசைத்தறிகளை நவீனமயமாக்க மானியம்: ஆட்சியா் தகவல்

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 11:41 pm

Syndication

நாமக்கல்: விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விசைத்தறித் தொழிலில் வளா்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத அதிகம் வேகம் உள்ள ரேப்பியா் தறிகளாக தரம் உயா்த்தும் அல்லது புதிய ரேப்பியா் தறிகள் கொள்முதல் செய்யவும் மூலதன மானியம் வழங்கப்பட உள்ளது.

சாதாரண விசைத்தறிகளில் ரேப்பியா் உபகரணங்களை பொருத்தவும், புதிய ரேப்பியா் தறிகளை விநியோகம் செய்யவும் விரும்புவோா் ஜன. 23 க்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ஈகாட்டூா், எலந்தகுட்டை அஞ்சல், குமாரபாளையம் வட்டம், நாமக்கல் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு சரக கைத்தறி உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 97872 91881, 99948 14434 என்ற கைப்பேசி எண்களிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.