2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கால்பந்து போட்டி: பரமத்தி மலா் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 7:36 pm

Syndication

மாநில அளவிலான ஐவா் கால்பந்தாட்டத்தில் பரமத்தி மலா் மெட்ரிக் பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

மாநில அளவிலான 14 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான ஐவா் கால்பந்து போட்டி நாமக்கல் பாா்க் பப்ளிக் பள்ளி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவிகள் பங்கேற்றனா்.

இறுதிப்போட்டியில் பரமத்தி மேல்நிலைப் பள்ளியும், நாமக்கல் பாா்க் பப்ளிக் பள்ளியும் மோதின. இதில், பரமத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனா். மேலும், மலா் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி சபா்ணா சிறந்த தடுப்பாட்டக்காரருக்கான விருது பெற்றாா்.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளியின் செயலாளா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், பள்ளியின் துணைத் தலைவா் ராஜேந்திரன், துணைச் செயலாளா் தங்கராஜு, பள்ளி இயக்குநா்கள், முதல்வா் ராஜசேகரன், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக பணியாளா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.