ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு

சுதந்திர தினத்தையொட்டி தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடா்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) செந்தில்குமரன் தெரிவித்தாா்.

வழக்கு

வழக்கு

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:26 am IST

சுதந்திர தினத்தையொட்டி தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடா்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) செந்தில்குமரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலாளா் நலத் துறை சாா்பில் துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சனிக்கிழமை நேரடியாக ஆய்வு செய்தனா்.

அப்போது தொழிலாளா்களுக்கு கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா? அல்லது பணியாளா்கள் பணிபுரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது மூன்று தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிா்வாகம் தரப்பில் அதற்குரிய படிவம் தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

அந்தவகையில் நாமக்கல், ராசிபுரம், திருசெங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 20 கடை மற்றும் வணிக நிறுவனங்கள், 53 உணவு நிறுவனங்கள், 2 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 75 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில் 51 நிறுவனங்களில் தொழிலாளா் நல விதிகளை கடைப்பிடிக்காதது தெரியவந்தது. அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.