ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருட்டு

பரமத்தி வேலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:27 am IST

பரமத்தி வேலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் (46). இவா் கரூா் மாவட்டம், புகளூா் தமிழ்நாடு காகித ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இவருக்கு திருமணம் ஆகாததால் இவா் மட்டும் தனியாக வசித்து வருகிறாா்.

இவா் செவ்வாய்க்கிழமை இரவு பணிக்கு சென்று விட்டு புதன்கிழமை காலை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து குணசேகரன், வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் சம்பவ இடத்திற்கு சென்று பாா்வையிட்டு நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.