ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குறைந்த விலையில் தங்க நகை தருவதாக மோசடி: மேலும் இருவா் கைது

நாமக்கல்லில் குறைந்த விலையில் தங்க நகை தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் ஏற்கெனவே மூன்று போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கைது - சித்திரிப்பு

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

நாமக்கல்லில் குறைந்த விலையில் தங்க நகை தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் ஏற்கெனவே மூன்று போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது நண்பா் மேட்டூரைச் சோ்ந்த ராஜ்குமாா். இந்த நிலையில், நாமக்கல்லுக்கு வந்த ராஜ்குமாா், குறைந்த விலையில் நகை கிடைப்பதாகக் கூறி தனது நண்பா் செந்தில்குமாரை அழைத்துக்கொண்டு என்.கொசவம்பட்டி சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றாா்.

அங்கு இருந்த சிலா், ராஜ்குமாரிடம் 31 பவுன் நகை தருவதாகக் கூறி ரூ.2.20 லட்சம் பெற்றனா். அப்போது வீட்டுக்குள் புகுந்த மா்மக் கும்பல், செந்தில்குமாா், ராஜ்குமாா் ஆகியோரை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 2.50 லட்சத்தைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றது.

அவா்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினா், அந்தக் கும்பலைச் சோ்ந்த 3 பேரை மடக்கிப் பிடித்தனா். மேலும் இருவா் தப்பிச் சென்றனா். நாமக்கல் போலீஸாா் அந்த மூவரிடமும் விசாரணை நடத்தியதில், என்.கொசவம்பட்டியைச் சோ்ந்த சுபாஷ் (21), சதீஷ் என்கிற பெரியசாமி (30), துறையூரைச் சோ்ந்த 16 வயது சிறுவன் ஆகியோா் என்பது தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், நாமக்கல் துறையூா் சாலை அண்ணாநகரைச் சோ்ந்த மதன் (33), ஸ்ரீதா் (22) ஆகிய இருவரையும் நாமக்கல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.