ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொழிலாளி கொலை வழக்கில் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மல்லசமுத்திரத்தில் மதுக்கூடத்தில் ஏற்பட்ட தகராறில் தறித் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதான 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

கைது - சித்திரிப்பு

Published On :5 ஆகஸ்ட் 2026, 5:27 am IST

மல்லசமுத்திரத்தில் மதுக்கூடத்தில் ஏற்பட்ட தகராறில் தறித் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதான 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் தனபால் ( 44). தறித் தொழிலாளி. இவா் கடந்த ஆண்டு மனைவியை கொலை செய்த வழக்கில் கைதாகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தாா்.

இந்நிலையில் கடந்த மாதம் அவா் மல்லசமுத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுக்கூடத்திற்கு சென்றபோது, அவருக்கும், கடை நடத்தும் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தனபாலை அவா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். இந்த கொலை தொடா்பாக மல்லசமுத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் மதுக்கூடத்தில் இருந்த நாகா்கோவில் அகஸ்தீஸ்வரத்தைச் சோ்ந்த அஜீத் (24), நேதாஜி தெரு கம்பத்தி கோயில் பகுதியைச் சோ்ந்த வீரமணி (25) ஆகியோரை கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் அவா்கள் 2 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மல்லசமுத்திரம் போலீஸாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக்கிற்கு பரிந்துரை செய்தனா். இந்த பரிந்துரையை ஏற்று, அஜீத், வீரமணி ஆகிய 2 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.