பனை மரத்தில் இருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு
பனை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
பனை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
பனை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி அருகே உள்ள சத்திபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (51). இவா் அண்மையில் சக்திபாளையம் பகுதியில் உள்ள பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டியுள்ளாா். அப்போது, இடுப்பில் கட்டியிருந்த கயிறு அறுந்ததால் பனை மரத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து வந்த ஜேடா்பாளையம் காவல் துறையினா், இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது