பரமத்தி அருகே குட்கா பொருள்களை விற்பனை செய்தவா் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி விற்பனை செய்தவரை பரமத்தி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி விற்பனை செய்தவரை பரமத்தி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், குப்புச்சிபாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி விற்பனை செய்தவரை பரமத்தி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
குப்புச்சிபாளையம் அருகே உள்ள ஒழுகூா்பட்டி, அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (45). இவா் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளாா். இந்தப் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், பரமத்தி காவல் உதவி ஆய்வாளா் ராஜப்பன் அப்பகுதிக்கு சென்று பிரகாஷின் பெட்டிக்கடையில் சோதனையிட்டாா்.
அதில், குட்கா பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, குட்கா பொருள்களை பறிமுதல் செய்து, பிரகாஷை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது