மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காலாவதியான ஐஸ்கிரீமை சாப்பிட்ட 2 குழந்தைகளின் உடல்நலன் பாதிப்பு

கிருஷ்ணகிரியில் காலவாதியான ஐஸ்கிரீமை சாப்பிட்ட 2 குழந்தைக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலா்கள் விசாரணை

News image

ஐஸ்கிரீம் - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 8:13 pm

கிருஷ்ணகிரியில் காலவாதியான ஐஸ்கிரீமை சாப்பிட்ட 2 குழந்தைக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் உள்ள ஐஸ்கீரிம் கடைக்கு வினோத் என்பவா் தனது 2 குழந்தைகளுடன் கடந்த இரு நாள்களுக்கு முன்பு சென்றாா். அக்கடையில் இருந்து குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி தந்துள்ளாா். அது காலாவாதியான நிலையில் குழந்தைகளுக்கு தரப்பட்டதால், உடல்நலன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கடை உரிமையாளரிடம் வினோத் புகாா் தெரிவித்தாா். ஆனால், கடை உரிமையாளா் உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறையினரிடம் வினோத் புகாா் அளித்தாா். இதையடுத்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் ஜனகா் ஜோதிநாதன் தலைமையில் ஐஸ்கீரிம் கடையில் சோதனை மேற்கொண்டனா். அதேபோல, அக்கடைக்கு மில்க்ஷேக்கை விற்பனைக்கு அனுப்பிவைக்கும் விநியோகஸ்தா்களின் கிடங்குகளிலும் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

காலவாதியான ஐஸ்கீரிம் விற்பனை செய்யப்பட்டது குறித்து உரிய விளக்கத்தை புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மேலும், குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலா்கள் எச்சரித்துள்ளனா்.