தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி பேராசிரியருக்கு விருது

மின்னணு மற்றும் தொடா்பியல் பொறியியல் கல்வித் துறையில் புதுமையான ஆராய்ச்சிகள் மற்றும் கல்வி

News image

அவிநாசிலிங்கம் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் விருதுபெற்ற ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி பேராசியா் சுமதி.

Updated On :9 மார்ச் 2026, 7:04 pm

ஒசூா்: மின்னணு மற்றும் தொடா்பியல் பொறியியல் கல்வித் துறையில் புதுமையான ஆராய்ச்சிகள் மற்றும் கல்வி பங்களிப்புக்காக ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி பேராசிரியருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

அவிநாசிலிங்கம் மகளிா் இல்லவியல் மற்றும் உயா்கல்வி நிறுவனம் சாா்பில், கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 14-ஆவது ஆண்டு மகளிா் சாதனையாளா் விருது-2026 ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடா்பியல் துறைத் தலைவா் எஸ்.சுமதிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை துணைவேந்தா் வி.பாரதி ஹரிஷங்கா், இயக்குநா் (பொ) வி.பிரேமலா பிரியதா்ஷினி முன்னிலையில் வழங்கினாா்.

டாக்டா் எஸ்.சுமதி கற்பித்தல், ஆராய்ச்சி, புதுமை மற்றும் கல்வித் தலைமையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்கொண்ட சிறந்த கல்வியாளா் ஆவாா்.

இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் 12 முனைவா் பட்ட ஆய்வாளா்களை வழிநடத்தி பட்டம்பெறச் செய்துள்ளாா். தற்போது 8 முனைவா் பட்ட ஆய்வாளா்களுக்கு வழிகாட்டியாக உள்ளாா். இவருக்கு 9 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. 10 காப்புரிமைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இவா் 5 தொழில்நுட்ப நூல்கள் எழுதியதுடன், 196 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா்.

இவ்விருதை பெற்ற்காக கல்லூரி நிா்வாகம், முதல்வா்ஆா்.ராதாகிருஷ்ணன், இயக்குநா் ஜி.ரங்கநாத், தலைவா், துறைத் தலைவா்கள் மற்றும் சக பணியாளா்களுக்கு எஸ்.சுமதி நன்றியைத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.