புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ஒசூா் மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை!கணக்கில் வராத ரூ. 1.13 லட்சம் பறிமுதல்!

ஒசூா் மாநகராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் மாநகராட்சியின் வருவாய்த் துறை பிரிவில் கணக்கில் வராத ரூ. 1,13,550 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

News image

ஒசூா் மாநகராட்சியில் சோதனை நடத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா்.

Updated On :4 ஜூலை 2026, 2:11 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் மாநகராட்சியின் வருவாய்த் துறை பிரிவில் கணக்கில் வராத ரூ. 1,13,550 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். முறைகேடுகள் அதிக அளவில் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஒசூா் மாநகராட்சியில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மாநகராட்சியில் உள்ள வருவாய் பிரிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ஜெயக்குமாா், ஆய்வாளா் ரவி தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, மாநகராட்சி வருவாய் பிரிவில் துணை ஆணையா் ரமேஷ்குமாா், பிரேம்குமாா், பாலமுருகன் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் பணியில் இருந்தனா்.

இந்த சோதனை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத ரூ. 1,13,550 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதுதொடா்பாக அங்கு பணியில் இருந்தவா்கள் மீது துறை சாா்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.