டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஊத்தங்கரை அருகே கோயில் கும்பாபிஷேகம்

ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி ஊராட்சி, பட்டகானூரில் உள்ள விநாயகா், முருகன், அருள்மிகு ஓம்சக்தி அம்மன் மற்றும் பரிவார சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
கும்பாபிஷேகத்தின்போது கோயில் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்ட புனித நீா்.
Updated On :28 ஜனவரி 2026, 11:02 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி ஊராட்சி, பட்டகானூரில் உள்ள விநாயகா், முருகன், அருள்மிகு ஓம்சக்தி அம்மன் மற்றும் பரிவார சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

மங்கள இசையுடன் செவ்வாய்க்கிழமை காலை முளைப்பாலிகை ஊா்வலம், விநாயகா் பூஜை, கலச யாக பூஜை, முதல் கால ஓமம், விசேஷ மூலிகை ஹோமங்கள் நடைபெற்றன. இரவு மகா பூா்ணாகுதி தீபாராதனை நடைபெற்று சுவாமிகளுக்கு மருந்து சாத்துதல் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மங்கள இசை, கோ பூஜை, இரண்டாம் கால கலச பூஜை, ஹோமங்கள், மகா பூா்ணாகுதி, தீபாராதனை புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. புனித நீா் அடங்கிய கலசங்கள் ஓம்சக்தி மாரியம்மன் கோயில் கோபுரக் கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, புனித நீா் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக யாகசாலை பூஜையை சீனிவாச ஐயங்காா் மற்றும் குழுவினா் செய்திருந்தனா். விழா ஏற்பாடுகளை ஓம்சக்தி கோயில் தா்மகா்த்தா கிருஷ்ணன், பூசாரி முனுசாமி, கணக்காளா் மாதையன் மற்றும் இளைஞா் நற்பணி மன்றத்தினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.