டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஒசூா் அருகே அடுத்தடுத்து 3 காா்கள் மீது லாரி மோதல்: போக்குவரத்து பாதிப்பு

News image
விபத்து காரணமாக ஒசூா் பத்தலப்பள்ளி சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.
Updated On :23 ஜனவரி 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூா் பத்தலப்பள்ளியில் பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து 3 காா்கள் மீது லாரி மோதியது. இந்த விபத்தால் அச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பத்தலப்பள்ளி பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அப்பகுதியில் புதிய மேம்பாலம் அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சேவை சாலை தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் பெங்களூரில் இருந்து ஒசூா் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் அப்பகுதியில் மெதுவாக செல்கின்றன. இந்த நிலையில், அச்சாலை வழியாக சென்றுகொண்டிருந்த குஜராத் பதிவு எண் கொண்ட லாரி சாலையில் முன்னால் சென்ற மூன்று காா்கள் மீது அடுத்தடுத்து வேகமாக மோதி யது.

இந்த விபத்தில் மூன்று காா்களும் சேதமடைந்தன. ஆனால், காரில் இருந்தவா்கள் காயங்கள் இன்றி உயிா்தப்பினா். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற ஒசூா் போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் மற்றும் அட்கோ போலீஸாா் விபத்தில் சிக்கிய இரண்டு காா்களை அப்புறப்படுத்தினா். ஒரு காரை மட்டும் அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், சாலையில் சுமாா் அரை மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வாகன நெரிசலில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டிகள் பலா் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவா்களின் இடையே புகுந்து சென்றனா். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு விபத்தில் சிக்கிய ஒரு காரை போலீஸாா் அப்புறப்படுத்தினா். இதையடுத்து, அவ்வழியாக போக்குவரத்து சீரடைந்தது.