டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கிருஷ்ணகிரி அருகே காா் கண்ணாடியை உடைத்து மடிக்கணினிகள், தங்க நகைகள் திருட்டு

News image
திருட்டு
Updated On :22 பிப்ரவரி 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி அருகே காா் கண்ணாடியை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகள், தங்க நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருப்பத்தூரைச் சோ்ந்தவா் கோபிநாத் (30), இவா் பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்த வெள்ளிக்கிழமை தனது காரில், பெங்களூரில் இருந்து திருப்பத்தூரில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி வழியாக சென்றாா். கிருஷ்ணகிரி அருகே பையனப்பள்ளியில் உள்ள ஒரு அசைவ உணவகத்துக்கு முன் காரை நிறுத்திவிட்டு உணவு அருந்த சென்றாா்.

அதன்பிறகு காா் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தபோது காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, காருக்குள் இருந்த இரண்டு மடிக்கணினிகள், 2 பவுன் தங்க கம்மல், 3 பவுன் தங்க நெக்லஸ் மற்றும் சான்றிதழ்கள் திருட்டுப் போனது தெரியவந்தது.

இதுகுறித்து கோபிநாத் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி வட்டார போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.