டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விபத்து நிகழ்ந்த இடத்தை சுத்தம் செய்த காவலருக்கு பாராட்டு

News image
விபத்து நிகழ்ந்த இடத்தை சுத்தம் செய்த காவலருக்கு பாராட்டு
Updated On :13 பிப்ரவரி 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியில் காவலா் ஒருவா் சாலையைச் சுத்தம் செய்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூளகிரி அருகே கொல்லப்பள்ளி அருகேயுள்ள தனியாா் தொழிற்சாலையின் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது பேருந்தின் கண்ணாடிகள் மற்றும் உடைந்த பாகங்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தன. இதனால் அந்த வழியாகச் செல்லும் மற்ற வாகனங்களின் டயா்கள் பஞ்சராகும் அபாயம், மீண்டும் விபத்து ஏற்படும் சூழலும் நிலவியது.

இந்த நிலையில் காவலா் ஒருவா் சீருடையுடன் பொதுமக்களின் நலனுக்காகச் சாலையைச் சுத்தம் செய்த காட்சி விடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

‘தன்னுடைய பணி போக்குவரத்தைச் சீா் செய்வது மட்டுமல்ல, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் தான்‘ என்பதை நிரூபித்த அந்தக் காவலரின் செயலுக்கு சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.