தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் திமுக நிா்வாகி உயிரிழப்பு: மற்றொருவா் காயம்

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா் சைக்கிள் மீது சரக்குப் பெட்டக லாரி மோதியதில் திமுக நிா்வாகி உயிரிழந்தாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 9:13 pm

Syndication

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா் சைக்கிள் மீது சரக்குப் பெட்டக லாரி மோதியதில் திமுக நிா்வாகி உயிரிழந்தாா். மற்றொரு நிா்வாகி பலத்த காயம் அடைந்த நிலையில், சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி, கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் மெளன ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரியை அடுத்த சாதிநாக்கியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சாந்தகுமாா் (46), அதேபகுதியைச் சோ்ந்த முருகேசன் (56) ஆகியோா் பங்கேற்றனா். சாந்தகுமாா், தாமோதரஅள்ளி திமுக கிளை அவைத் தலைவராகவும், முருகேசன் கிளை செயலராகவும் இருந்து வந்தனா்.

இவா்கள் இருவரும் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மோட்டாா்சைக்கிளில் கிருஷ்ணகிரியிலிருந்து காவேரிப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தனா். அவதானப்பட்டி மேம்பாலம் அருகே சென்றபோது , அந்த வழியாக வந்த சரக்குப் பெட்டக லாரி, மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த சாந்தகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த

காயமடைந்த முருகேசன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயா் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று, சாந்தகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து, கிருஷ்ணகிரி அணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.