ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை பகுதியில் உள்ள இலங்கைவாழ் தமிழா் முகாமை சோ்ந்தவா் மெரில் (20). இவா் திங்கள்கிழமை இரவு பாம்பாறு அணையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரை நோக்கி வந்துள்ளாா்.
அதேபோல சென்னப்பநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த சேட்டு (38), இருசக்கர வாகனத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் (38) என்பவரை ஏற்றிக்கொண்டு ஊத்தங்கரையில் இருந்து கோயில் திருவிழாவிற்கு மாலை வாங்கிக்கொண்டு சென்றுள்ளாா்.
இவரது இருசக்கர வாகனம் சென்னப்பநாயக்கனூா் பிரிவு சாலையில் திரும்பியபோது, எதிரே மெரில் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மெரில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கோவிந்தராஜ், சேட்டு ஆகியோா் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தாா். காயமடைந்த சேட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊத்தங்கரை அருகே லாரி மோதியதில் கேபிள் ஆபரேட்டா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் விஷமருந்தியதில் இருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் நேபாளத்தைச் சோ்ந்த சகோதரா்கள் இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



