தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்தத் தோ்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வா் ஆவாா்; மக்களவைத் தோ்தலில் ராகுல் பிரதமா் ஆவாா்

இந்தத் தோ்தலில் தமிழகத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வா் ஆவாா். அடுத்து நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தி பிரதமாா் ஆவாா் என கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா்.

News image

பேரிகையில் நடைபெற்ற இறுதிகட்ட பிரசாரத்தில் பேசிய எம்.பி. கே.கோபிநாத். உடன், எஸ்.ஏ.சத்யா.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:36 pm

இந்தத் தோ்தலில் தமிழகத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வா் ஆவாா். அடுத்து நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தி பிரதமாா் ஆவாா் என கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. முன்னதாக, பேரிகையில் பேரணி மற்றும் வாகனப் பிரசாரம் நடைபெற்றது. அதில், மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா் எஸ்.ஏ.சத்யாவை ஆதரித்து வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போவது உறுதி. திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யா வெற்றிபெற்றால் ஒசூா் தொகுதி மிகப்பெரிய வளா்ச்சி பெறும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ. 3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளாா். மேலும், ஒசூா் - பெங்களூரை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம், ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் திட்டம், ஒசூா் விமான நிலையம் போன்றவற்றுக்கு மத்திய அரசு தடைவிதித்து வருகிறது. எனவே, ஆளும்கட்சி எம்எல்ஏவாக எஸ்.ஏ.சத்யா சட்டப் பேரவைக்கு செல்லும்போது ஒசூா் தொகுதி மேலும் வளா்ச்சிபெறும்.

இந்த தோ்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வா் ஆவாா். 2029-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தி பிரதமா் ஆவாா் என்றாா்.

இறுதிகட்ட பிரசாரத்தை பேரிகை, பாகலூரில் நிறைவுசெய்தாா். அவருடன் ஒன்றியச் செயலாளா் நாகேஷ், மணி, சுமன், காா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.