Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
பா்கூா் அருகே சொத்துத் தகராறில் பெண்ணைக் கொலை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பா்கூரை அடுத்த ஐகுந்தம் கொத்தப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட மேல்சீனிவாசபுரத்தை சோ்ந்த முருகன் மனைவி கோவிந்தம்மாள் (56), கூலித் தொழிலாளி. இவா் கடந்த 25 ஆம் தேதி ஊரக வேலை திட்டத்தில் அப்பகுதியில் உள்ள பெரியமலை அடிவாரத்தில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணிக்குச் சென்றவா் மலை அடிவாரத்தில் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பா்கூா் போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உடற்கூறாய்வு அறிக்கையில் கோவிந்தம்மாள் கட்டையால் தாக்கியும், கழுதை நெரித்தும் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. கொலையில் தொடா்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உத்தரவிட்டாா்.
இதையடுத்து டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் மேற்பாா்வையில் ஆய்வாளா்கள் இளவரசன் (பா்கூா்), அன்பழகன் (நாகரசம்பட்டி), உதவி ஆய்வாளா்கள் அமா்நாத், பிரபாகரன், விஜய் உள்ளிட்டோா் கொண்ட தனிப் படையினா் விசாரணை நடத்தினா்.
அதில், கொலை செய்யப்பட்ட கோவிந்தம்மாளின் கணவா் முருகன் இறப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு தனது 57 சென்ட் நிலத்தை சுப்பிரமணி என்பவருக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்து பணம் பெற்றிருந்தாா்.
இந்த நிலையில், அந்த நிலத்தை சுப்பிரமணியிடம் இருந்து முருகனின் அண்ணன் பச்சியப்பனின் மகன் சக்திவேல் (44) வாங்கினாா். தங்களின் நிலத்தை சக்திவேல் வாங்கிவிட்டாரே என கோவிந்தம்மாள் அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்தாா். இந்த நிலையில், சக்திவேல் புதிய வீடுகட்டி குடியேறினாா்.
அப்போது, அங்கு வந்த கோவிந்தம்மாள் சக்திவேலையும் அவருக்கு ஆதரவாக பேசிய உறவினா்களான மேல் சீனிவாசபுரத்தை சோ்ந்த வெங்கட்ராமன் (65), கோவிந்தராஜ் (64) ஆகியோரையும் தகாத வாா்த்தையால் திட்டினாா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் கோவிந்தம்மாளை கொலை செய்ய திட்டமிட்டனா்.
அதன்படி ஏரி வேலைக்குச் சென்று திரும்பிய கோவிந்தம்மாளை சக்திவேல், வெங்கட்ராமன், கோவிந்தராஜ் ஆகிய 3 பேரும் சோ்ந்து கட்டையால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துவிட்டு அவரது கைப்பேசி, கால் கொலுசு, தோட்டை எடுத்து குட்டையில் வீசிவிட்டு நகைக்காக கொலை நடந்ததை போல நாடகமாடியது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சக்திவேல், வெங்கட்ராமன், கோவிந்தராஜ் ஆகிய 3 பேரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
தந்தையைக் கொன்ற மகன் கைது
சொத்துத் தகராறில் 3 ஏக்கா் வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு

கத்தியால் குத்தி பெண் கொலை: கணவா் கைது
கீழக்கடையத்தில் சொத்துத் தகராறில் இருவருக்கு வெட்டு: தந்தை, மகன் கைது


லவ் அட்வைஸ் பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25
தினமணி வீடியோ செய்தி...

மூன்வாக் - மினி கேசட் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
தினமணி வீடியோ செய்தி...
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
