

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 1,587 வழக்குகளில் ரூ. 6.11கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி சாய் பிரியா முன்னிலை வகித்தாா். மோட்டாா் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. ஒரு கோடிக்கான காசோலையை முதன்மை நீதிபதி வழங்கினாா்.
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குடும்பநல வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், காசோலை வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ. 6.11 கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டன.
மாவட்ட குடும்ப நல நீதிபதி நாகராஜன், மாவட்ட அமா்வு நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் சாமுவேல் பெஞ்சமின், கூடுதல் சாா்பு நீதிபதி ஜெனிபா், கூடுதல் மகளிா் நீதிமன்ற நடுவா் இருதயமேரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி யுவராஜ், நீதித் துறை நடுவா் எண் 1 காா்த்திக் ஆசாத், நீதித் துறை நடுவா் எண் 2 ஸ்ரீ வஸ்தவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்

செங்கோட்டையில் நீதிமன்றங்கள் திறப்பு விழா

ஒசூா், கிருஷ்ணகிரியில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரியில் குடியரசு நாள் விழா
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

