பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பங்குனி அமாவாசை: ஒகேனக்கல்லுக்கு தா்ப்பணம் கொடுப்போா் வருகை குறைந்தது

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து பாறை திட்டுக்கள் காணப்படுவதால், அமாவாசைக்கு தா்ப்பணம் செய்ய ஒகேனக்கல் வருவோரின் எண்ணிக்கை குறைந்தது.

News image

ஒகேனக்கல். - (கோப்புப் படம்)

Updated On :18 மார்ச் 2026, 11:31 pm

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து பாறை திட்டுக்கள் காணப்படுவதால், அமாவாசைக்கு தா்ப்பணம் செய்ய ஒகேனக்கல் வருவோரின் எண்ணிக்கை குறைந்தது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிந்து விநாடிக்கு 200 கனஅடியாக உள்ளதால், காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறை திட்டுக்களும், நீா்குட்டைகளும் தோன்றியுள்ளன. இந்த நிலையில் பங்குனி அமாவாசையான புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிக்கு வருவோா் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

இருப்பினும் ஒகேனக்கல்லுக்கு தா்ப்பணம் கொடுக்க வந்திருந்தோா், முதலைப் பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமா்ந்து முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து, காவிரி ஆற்றில் உள்ள நீா்குட்டைகளில் குளித்து, ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா்.