தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image

சமையல் எரிவாயு உருளைகள் - பிரதிப் படம்

Updated On :15 மார்ச் 2026, 7:49 pm

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்தை கண்டித்து தருமபுரியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி பாரதிபுரம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் திமுக மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமை வகித்து பேசினாா்.

இதில், தேமுதிக மாநில அவைத் தலைவா் மருத்துவா் இளங்கோவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வே.விஸ்வநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் த.கு.பாண்டியன், தருமபுரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மே.அன்பழகன், திராவிடா் கழக மாநில மகளிரணிச் செயலாளா் தகடூா் தமிழ்ச்செல்வி ஆகியோா் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விலை ஏற்றத்தை திரும்பப் பெற வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முன்பதிவு நிபந்தனைகளை விலக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலகம், பாலக்கோடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் திரளானோா் கலந்துகொண்டனா்.