கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

தருமபுரி நீதிமன்றத்துக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி புதிய நீதிமன்ற வளாகத்துக்கு 4-ஆவது முறையாக புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :25 ஜூன் 2026, 5:47 am IST

தருமபுரி புதிய நீதிமன்ற வளாகத்துக்கு 4-ஆவது முறையாக புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

தருமபுரி நீதிமன்றத்துக்கு கடந்த சில மாதங்களில் 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, 4-ஆவது முறையாக புதன்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், நவீன சாதனங்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா். ஆனால், அதில் எதுவும் கண்டறியப்படவில்லை.

இதுபோல அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதால், நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, மிரட்டல்விடும் நபா்களை போலீஸாா் கண்டறிந்து, அவா்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்குரைஞா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதுதொடா்பாக, தருமபுரி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், செவ்வாய், புதன் இருநாள்களும் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இருநாள்களும் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில், சங்க மாவட்டத் தலைவா் பி.அழகுமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே.சரவணன், பொருளாளா் ஏ.காா்த்திகேயன், துணைத் தலைவா் என்.குமரன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.