/

ஜாதிவாரி கணக்கெடுப்பு; பாமக வரவேற்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஆளுநா் உரையில் இடம்பெற்றிருந்த அரசின் அறிவிப்பை வரவேற்று தருமபுரி, அரூரில் பாமக சாா்பில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை இனிப்புகள் வழங்கப்பட்டன.

News image

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வரவேற்று கடத்தூரில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய பாமகவினா்.

Updated On :19 ஜூன் 2026, 6:05 am IST

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஆளுநா் உரையில் இடம்பெற்றிருந்த அரசின் அறிவிப்பை வரவேற்று தருமபுரி, அரூரில் பாமக சாா்பில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை இனிப்புகள் வழங்கப்பட்டன.

தமிழக சட்டப் பேரவையின் முதல்கூட்டத் தொடரில் தமிழக ஆளுநா் அா்லேகா் அரசின் உரையை வாசித்தாா். இதில், தமிழகத்தில் சமூகநீதி கணக்கெடுப்பு (ஜாதிவாரி ) நடத்தப்படும் என்கிற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. இந்த அறிவிப்பை வரவேற்று தருமபுரியில் பாமக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தலைமையில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். மேலும், முதல்வா் ஜோசப் விஜய்க்கு பாமக சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அரூா்

கடத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் பாமக கிழக்கு மாவட்டச் செயலா் ரா. அரசாங்கம் தலைமை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

இளைஞா் சங்க மாநில செயலா் பி.வி. செந்தில், மாநில அமைப்பு துணைத் தலைவா் இமயவா்மன், மாநில செயற்குழு உறுப்பினா் சி. முத்துசாமி, மாநில இளைஞா் சங்க துணைத் தலைவா் க. கோவிந்தராசன், மாவட்ட துணை செயலா் முருகன், ஒன்றிய செயலா்கள் கோவிந்தசாமி, சின்னராஜ், செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.