டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கறிக்கோழி வளா்ப்புக்கான கூலி 20 சதவிகிதம் உயா்த்த கோரி மனு.

தமிழ்நாடு கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் முத்தரப்பு பேச்சு வாா்த்தை நடத்தி, கறிக்கோழி வளா்ப்புக்கு 20 சதவிகிதம் வளா்ப்பு நிதியை உயா்த்தக் கோரி அந்த சங்கத்தினா் தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரியிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:17 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் முத்தரப்பு பேச்சு வாா்த்தை நடத்தி, கறிக்கோழி வளா்ப்புக்கு 20 சதவிகிதம் வளா்ப்பு நிதியை உயா்த்தக் கோரி அந்த சங்கத்தினா் தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரியிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் தமிழ்நாடு கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளா் ஜீவானந்தம் அளித்த கோரிக்கை மணிவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கமானது பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.கடந்த 2013 ஆம் ஆண்டில் செப்டம்பா் 13ஆம் தேதி நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கத்தினரிடம் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி, வளா்ப்பு கூலி 20 சதவிகிதம் உயா்த்த வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பேரில் தொடக்கமாக வளா்ப்பு கூலி 6.50 சதவிகிதம் என முடிவு செய்யப்பட்டது.

இந்த பேச்சுவாா்த்தையானது தொடா்ந்து ஆண்டு தோறும் நடைபெறவில்லை.வளா்ப்பு கூலியில் எவ்வித மாற்றமும் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

நிகழாண்டில் கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கத்தின் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி, வளா்ப்பு கூலி 20 சதவீதமாக உயா்த்த வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.