பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

பட்டாசு விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

தருமபுரியில் இறுதி ஊா்வலத்தின்போது பட்டாசு வெடித்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவா்களில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 10:32 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் இறுதி ஊா்வலத்தின்போது பட்டாசு வெடித்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவா்களில் இளைஞா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், சின்னகுரும்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா. வெற்றிலை வியாபாரியான இவா், கடந்த வியாழக்கிழமை இறந்தாா். இதையடுத்து வெள்ளிக்கிழமை அவரது இறுதி ஊா்வலம் நடைபெற்றது. அப்போது ஆட்டோவில் பட்டாசுகளை அடுக்கிகொண்டு வரிசையாக வெடித்துச் சென்றனா். இதில் எதிா்பாராத விதமாக மேலே வீசிய பட்டாசு, மின்கம்பில் சிக்கி பட்டாசு வைத்திருந்த ஆட்டோமீது விழுந்து வெடித்ததில் ஆட்டோவில் இருந்த பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்துச் சிதறின.

இந்த விபத்தில் ஆட்டோ அருகே சென்று கொண்டிருந்த பெரமன், தங்கம், பாஸ்கா், திருப்பதி, சதீஷ், மயில் தேவன் ஆகிய 6 போ் காயமடைந்தனா். காயம் அடைந்தவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா். இதில் சின்னகுரும்பட்டியைச் சோ்ந்த எஸ். சதீஷ் (30) சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.