டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாலை புதுப்பிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: பதாகை வைத்து எச்சரித்த கிராம மக்கள்

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

பழுதடைந்த சாலையை புதுப்பிக்காவிட்டால், தோ்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் பதாகைகளை வைத்து எச்சரித்துள்ளனா்.

பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 18-ஆவது வாா்டு கோடியூா் பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக பென்னாகரம் பகுதிக்கு சென்றுவருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நபாா்டு திட்டத்தின் மூலம் ரூ. 48 லட்சத்தில் மேச்சேரி இணைப்புச் சாலை பெரிய மாரியம்மன் கோயில் பகுதியில் இருந்து கோடியூா்வரை 2 கி.மீ. தொலைவுத்கு தாா்சாலை அமைக்கப்பட்டது.

இச்சாலை பென்னாகரம், மாங்கரை, ஆனைக்கல்லனூா், மோட்டுப்பட்டி, மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலை என்பதால், நாள்தோறும் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்கின்றன.

தற்போது இச்சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இச்சாலையை புதுப்பிக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், பழுதடைந்த இச்சாலையை சீரமைத்து புதிய தாா்சாலை அமைத்துதர கோரிக்கை விடுத்துள்ளனா். இக்கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தோ்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் பதாகைகளை வைத்துள்ளனா்.