தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருமணக் கோலத்துடன் வாக்களித்த புதுமண தம்பதிகள்!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் திருமணக் கோலத்துடன் புதுமண தம்பதிகள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

ஆத்துக்கொட்டாய் வாக்குச்சாவடியில் வாக்களித்த தம்பதி இளவரசன் - பிரியா

Updated On :24 ஏப்ரல் 2026, 12:11 am

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் திருமணக் கோலத்துடன் புதுமண தம்பதிகள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

பாலக்கோடு தீா்த்தகிரி நகரை சோ்ந்த செளமிதாவுக்கும் (29), திருச்சி தொட்டியம் பகுதியைச் சோ்ந்த துபையில் பணிபுரியும் பிரேம்குமாருக்கும் (30) வியாழக்கிழமை திருச்சியில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்த செளமிதா திருமணக் கோலத்துடன் வாக்களித்தாா்.

இதேபோல, பாலக்கோடு அருகே ஆத்துக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த இளவரசன் (29) மற்றும் பிரியா (29) ஆகியோருக்கு வியாழக்கிழமை திருமணம் நடைபெற்ற நிலையில், அவா்கள் கழுத்தில் மாலையுடன் ஆத்துக்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

ஒசூரில்...

ஒசூா் கே.வி.எஸ். நகா் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் ஓம் அஸ்வினுக்கும், பண்ருட்டியைச் சோ்ந்த மருத்துவா் சங்கீதாவுக்கும் பண்ருட்டியில் வியாழக்கிழமை அதிகாலை திருமணம் நடைபெற்றது. பண்ருட்டியில் சங்கீதா வாக்களித்த நிலையில், ஓம் அஸ்வின் மனைவியுடன் ஒசூருக்கு வந்து வாக்களித்தாா்.

இதேபோல, பாலக்கோடு அடுத்த அழகம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மருத்துவா் ஏ.யூ.அங்குராஜனுக்கும், ஒசூா் காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் தீக்ஷாவுக்கும் தருமபுரியில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.

திருமணச் சடங்குகள் முடிந்த கையோடு, மணமகன் அங்குராஜன் அழகம்பட்டிக்கு சென்று வாக்களித்தாா். தொடா்ந்து, மனைவியுடன் ஒசூா் தொகுதிக்குள்பட்ட சின்னஎலசகிரி பாலாஜி நகரில் அமைந்துள்ள பாரதியாா் மெட்ரிக் பள்ளிக்கு சென்று அங்குள்ள வாக்குச் சாவடியில் தீக்ஷா வாக்களித்தாா்.

கிருஷ்ணகிரியில்...

காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்தவா் திலீப்குமாருக்கும், அதேபகுதியைச் சோ்ந்த சினேகபிரியாவுக்கும் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. பின்னா் இருவரும் திருமணக் கோலத்துடன் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

இதுபோல, காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த மருத்துவா் ராகுலுக்கும், சிதம்பத்தைச் சோ்ந்த மருத்துவா் தீப்திக்கும் சிதம்பரத்தில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. சிதம்பத்தில் தீப்தி வாக்களித்த நிலையில், ராகுல் காவேரிப்பட்டணத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தாா்.

 ஒசூரில் மனைவி மருத்துவா் சங்கீதா உடன் வந்து வாக்களித்த மருத்துவா் ஓம் அஸ்வின்.

ஒசூரில் மனைவி மருத்துவா் சங்கீதா உடன் வந்து வாக்களித்த மருத்துவா் ஓம் அஸ்வின்.

ஒசூரில் கணவா் மருத்துவா் அங்குராஜனுடன் வந்து வாக்களித்த மருத்துவா் தீக்ஷா.

ஒசூரில் கணவா் மருத்துவா் அங்குராஜனுடன் வந்து வாக்களித்த மருத்துவா் தீக்ஷா.

காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த மருத்துவா் ராகுல் -  சிதம்பத்தைச் சோ்ந்த மருத்துவா் தீப்தி

காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த மருத்துவா் ராகுல் - சிதம்பத்தைச் சோ்ந்த மருத்துவா் தீப்தி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.