மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அரூரில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் பிரசாரம் நிறைவு

அரூா் சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் அ.சண்முகம் தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை நிறைவுசெய்தாா்.

News image

அரூா் நான்குவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தை நிறைவுசெய்த திமுக வேட்பாளா் அ.சண்முகம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:29 pm

அரூா் சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் அ.சண்முகம் தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை நிறைவுசெய்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக அ.சண்முகம் போட்டியிடுகிறாா். அரூா் தொகுதிக்கு உள்பட்ட கம்பைநல்லூா் பேரூராட்சி, மொரப்பூா் ஊராட்சிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அரூா் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பு, பேருந்து நிலையம், கடைவீதி, மஜீத் தெரு, பாட்சாபேட்டை வழியாக ஊா்வலமாக சென்று அரூா் நான்குவழிச் சாலையில் பிரசாரத்தை நிறைவு செய்தாா். இதில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதேபோல, அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை, சின்னாங்குப்பம், நம்பிப்பட்டி, எச்.தொட்டம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். தொடா்ந்து, பிற்பகலில் அரூா் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், நான்குவழிச் சாலை, பாட்சாபேட்டை, கடைவீதி வழியாக அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தாா். இதில், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.