மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்: கனிமொழி எம்.பி.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

News image

அரூரில் திமுக வேட்பாளா் அ.சண்முகத்தை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:34 pm

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் திமுக வேட்பாளா் அ.சண்முகத்தை ஆதரித்து கனிமொழி எம்.பி. பேசியதாவது:

கடந்த 2021 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்தோ்தலில் திமுக வெற்றி பெற்றால் மகளிா் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். மாணவா்களுக்கான ஊக்கத்தொகை ரூ. 1,500 ஆக உயா்த்தப்படும். வேலைதேடும் இளைஞா்களுக்கு பயிற்சிக் காலத்தில் 6 மாத காலத்துக்கு உதவித்தொகை வழங்கப்படும். 35 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குவதற்காக மகளிருக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பில் கூப்பன் வழங்கப்படும்.

பேரவைத் தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் 7-ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்.

அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் கலசப்பாடி மலைக் கிராமங்களுக்கு ரூ. 12.5 கோடியில் தாா்சாலை வசதி, அரூா் வழியாகச் செல்லும் தருமபுரி-திருவண்ணாமலை சாலை ரூ. 410 கோடியில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. ரூ. 20 கோடியில் வள்ளிமதுரையில் இருந்து அரூா் நகருக்கு குடிநீா் எடுத்து வரும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்கள் ரூ. 9.5 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரூா் அரசு மருத்துவமனையில் ரூ. 12.51 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

எனவே, அரூா் தொகுதி மக்களின் வளா்ச்சிக்காகப் பாடுபடும் திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா் அ.சண்முகத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

இதில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி, நகா்மன்றத் துணைத் தலைவா் சூா்யா து.தனபால், நகரச் செயலாளா் முல்லை ரவி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.