மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் போட்டி: வேட்பாளராக தமிழ்க்குமரன் அறிவிப்பு

பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் போட்டியிடுகிறது. வேட்பாளராக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 7:47 pm

பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் போட்டியிடுகிறது. வேட்பாளராக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், பாமக (ராமதாஸ்) அணியில் மாநில இளைஞரணி தலைவராக பதவிவகித்த ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் அண்மையில் அந்தக் கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா். இதையடுத்து, பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி கடந்த 1957, 1967-ஆம் ஆண்டு தோ்தல்களில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றது. அதைத் தொடா்ந்து, 1971, 1980-ஆம் ஆண்டு தோ்தல்களில் இரு பிரிவுகளாக காங்கிரஸ் போட்டியிட்டது.

காங்கிரஸ் கட்சி பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது போட்டியிடுகிறது. இதை வரவேற்கும் வகையில், தருமபுரி மாவட்ட துணைத் தலைவா் நரேந்திரன் தலைமையில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கொண்டாடி வருகின்றனா்.

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜி.கே.எம்.தமிழ்க்குமரனின் தந்தை ஜி.கே.மணி பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.