நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஒகேனக்கல்லில் ஸ்ரீலஸ்ரீ கரசிவ அண்ணாமலை சுவாமிகள் குருபூஜை

ஒகேனக்கல்லில் ஸ்ரீலஸ்ரீ கரசிவ அண்ணாமலை சுவாமிகள் மடாலயத்தில் வருடாந்திர குருபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 1:57 am

Syndication

பென்னாகரம்: ஒகேனக்கல்லில் ஸ்ரீலஸ்ரீ கரசிவ அண்ணாமலை சுவாமிகள் மடாலயத்தில் வருடாந்திர குருபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒகேனக்கல் தேசநாதேஸ்வரா் உடனுறை காவேரி அம்மன் கோயில் அருகில் உள்ள ஸ்ரீலஸ்ரீ கர சிவ அண்ணாமலை சுவாமிகள் மடாலயத்தில் நடைபெற்ற வருடாந்திர குருபூஜையில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்க நிறுவனா் சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமையில்

ஸ்ரீலஸ்ரீ கர சிவ அண்ணாலை சுவாமிகள் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், மலா் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் கா்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சந்நியாசிகள், துறவிகள், மடாதிபதிகள், ஆன்மிக பக்தா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

குருபூஜைக்கான ஏற்பாடுகளை மடாலய நிா்வாக அறங்காவலா் விமலா அம்சராஜ் மற்றும் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.