அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

சிறப்பு ஓய்வூதியம் கோரி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா்.
Updated On :18 நவம்பர் 2024, 7:50 pm

Din

தருமபுரி: சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஆா்.மதலைமுத்து, மாநில துணைத் தலைவா் இ.கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் மாநில துணைத் தலைவா் எம்.கணேசன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.பெருமாள், ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளா் கே.புகழேந்தி, மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பு மாவட்டத் தலைவா் ஆா்.சுந்தரமூா்த்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா் நல அமைப்பின் மாநில இணைச் செயலாளா் கே.குப்புசாமி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

இதில், வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ. 6,750 வழங்க வேண்டும். அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஓய்வூதியா்களுக்கு ஈமச்சடங்கு நிதியாக ரூ. 25,000 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.