இந்த நூலகக் கட்டடத்தில் சுற்றுச்சுவர், நடைப்பாதைக்கான தரை மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாய்வுதள பாதைக்கான கைப்பிடி போன்ற பணிகள் நிறைவடையாத நிலையில் உள்ளன.கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தந்த சட்டமன்ற மதிப்பீட்டு குழு, உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட நூலகத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.1 கோடி வரிபாக்கியை உடனே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதுகுறித்து ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நூலக வரியை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தியதாக தெரியவில்லை. இதனால் புதிய கணினி நூலகத்துக்கான தடவாளப் பொருட்கள் வாங்க இயலாத நிலையில் மாவட்ட மைய நூலகம் உள்ளது.